நம்பியூர் அருகே நவக்காட்டுப்புதூர் மாயவா ரங்கப் பெருமாள் கோயில் விழாவில் கெட்டி செவியூர் ஊராட்சி மன்ற தலைவர் மகுடேஸ்வரன் அவர்களுக்கு சிறப்பு மரியாதை..

 ஈரோடு மாவட்டம் நம்பியூர் ஒன்றியம் கெட்டிசெவியூர் ஊராட்சியில் மாண்புமிகு முன்னாள் பள்ளிக்கல்வி துறை அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு. K.A. செங்கோட்டையன் அவர்களின் ஆணைக்கிணங்க நம்பியூர் ஒன்றிய கழகச் செயலாளர் திரு. தம்பி (எ) சுப்பிரமணியம் அவர்களின் உத்தரவின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் திரு. K.M. மகுடேஸ்வரன் அவர்கள் நவக்காட்டுப்புதூர் மாயவா ரங்கப் பெருமாள் திருக்கோயில்  திருவிழாவிற்கு 10000மதிப்புள்ள புதிய மின் இணைப்பு  வழங்கப்பட்டது. இதில் துணை தலைவர் திரு. பொங்கியாத்தான் மற்றும் 
திரு.பொன்னுசாமி,திரு.உத்திராசாமி.,திரு. காளியன்னன்.திரு.பாலு, திரு.கமலேஷ், திரு.ரங்கசாமி, திருமதி.சுதா. திருமதி.சிவகாமி மற்றும் கோயில் பூசாரிகள் கோயில் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தார்கள்.

செய்தியாளர்:  கோவர்த்தனன் 

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.