சத்தி,அக்.27- சத்தி கோட்டுவீராம்பாளையம், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பிரபு (38) மணைவி இந்திராணி (24) இவர்களுகு;கு ஒரு மகன் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கணவன் - மணைவி இருவரும் கடம்பூர் - கே.என். பாளையம் செல்லும் கடம்பூர் மலைப்பாதையில் ரோட்டோரமாக இருந்த பாறையில் மயங்கி கிடந்துள்ளனர். அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து கடம்பூர் போலீஸார் அவரது உறவினர்களிடம் விசாரனை நடத்தியதில் கடன் பிரச்சனை இருந்து வந்தாகவும் அதற்காக இருவரும் விஷம் குடித்து இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து கடம்பூர் போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.