ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த கடம்பூர் வனப்பகுதியில் யானை மிதித்து ஒருவர் பலி

ஈரோடு மாவட்டம், கோபியைச் சேர்ந்தவர் செந்தில் இவரது தோட்டத்தில் கடந்த 25 வருடமாக கணபதி பாளையத்தைச் சேர்ந்த ராமன் (64)  என்பவர் தோட்டத்து வேலை செய்து வருகிறார்.  இன்று காலை சுமார் 07.00  மணியளவில் பால் சொசைட்டிக்கு பால் ஊற்ற சென்றுள்ளார். பின் மீண்டும் தோட்டத்திற்கு செல்வதற்காக இருட்டிபாளையத்தில் இருந்து தோட்டத்திற்கு செல்ல வழியில் அருகில் உள்ள பள்ளத்தை கடந்து சென்று கொண்டிருந்த போது புதர் மறைவில் இருந்து வந்த யானை எதிர்பாராத விதமாக இராமனை தூக்கி  வீசியுள்ளது. 
இதில் ராமன் அருகில் உள்ள பாறையின்  மேல் விழுந்ததில் தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி சின்னத்தாயி என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவயிடத்திற்கு சென்ற
வனத்துறை அதிகாரிகள் மற்றும்  கடம்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர்  சாதிக் பாஷா  ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.