ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அடுத்த
கடம்பூர் மலைப்பகுதி,
ஏரியூர் கிராமத்திற்கு அருகில் ரமேஷ் என்பவரின் மக்காசோளக்காடு உள்ளது. இங்கு அடையாளம் தெரியாத நபர்கள் வேட்டையாடுவதற்கு நாட்டுத் துப்பாக்கி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வைத்திருந்தை ரோந்து சென்ற தனிப்பிரிவு காவலர் கங்காதரன் கைப்பற்றி கடம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவக்குமார் சோளக்காட்டின் உரிமையாளர் ரமேஷ் என்பரிடம் விசாரணை நடத்தி வருகிறார் .