சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விபத்துகோயில் பூசாரி உட்பட 4 பேர் உயிரிழப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர். 
கார் ஓட்டுநர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த புள்ளப்ப நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் கீர்த்திவேல் துரை (28). அங்காளம்மன் கோயில் பூசாரி ,  ஏளூரைச் சேர்ந்த மயிலானந்தன் (30), சதுமுகையைச் சேர்ந்த பூவரசன் (24), ராகவன் (26) இவர்கள் அனைவரும் சத்தியமங்கலம் - கோவை சாலையில் நேற்று நள்ளிரவில் காரில் சென்று கொண்டு இருந்தனர்.  காரினை  
பங்களாபுதூரைச் சேர்ந்த இளையராஜா (33) ஓட்டிச் சென்றுள்ளார். 
இந்த சாலையில் உள்ள சின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கீர்த்திவேல் துரை, மயிலானந்தன், பூவரசன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ராகவன், சிகிச்சைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழ்ந்தார். விபத்தில் பலத்த காயமடைந்த கார் ஓட்டுநர் இளையராஜா, கோபி  உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் முருகேசன் தலைமையிலான போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர்: சத்தியமங்கலம்
ச.அ.சதிஸ்குமார்

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.